×

அமெரிக்காவில் இந்திய போலீஸ்காரருக்கு விருது

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகர காவல்துறையில் காவலராக பணியாற்றி வருபவர் சுமித் சுலான்(27). கடந்த ஜனவரி மாதம் நியூயார்க் நகரில் வசிக்கும் ஒரு பெண் தன்னுடைய மகன் துப்பாக்கியால் சுட்டு கொன்று விடுவதாக மிரட்டுவதாக போலீசில் புகார் செய்தார். இதையடுத்து சுமித் சுலான், ஜேசன் ரிவேரா,வில்பர்ட் மோரா ஆகிய 3 போலீஸ்காரர்கள் அங்கு விரைந்து சென்றனர்.

அப்போது இளைஞர் துப்பாக்கியால் சுட்டதில் ஜேசன், வில்பர்ட் ஆகியோர் இறந்தனர். சுமித் சுலான் துரிதமாக செயல்பட்டு அந்த இளைஞரை துப்பாக்கியால் சுட்டு அந்த பெண்ணையும் அவருடைய மகனையும் காப்பாற்றினார். இதற்காக சுமித் சுலானுக்கு, வெள்ளை மாளிகையில் நடந்த விழாவில் நாட்டின் உயரிய விருதை அதிபர் ஜோ பைடன் வழங்கினார்.

The post அமெரிக்காவில் இந்திய போலீஸ்காரருக்கு விருது appeared first on Dinakaran.

Tags : United States ,New York ,Sumit Sulan ,New York City ,Dinakaran ,
× RELATED இந்தியாவில் நடந்து வரும்...